மாருதியின் கதை(வணிகம்)

0 reviews  

Author: ஆர்.சி.பார்கவா-சீதா ; தமிழில் : சுப.மீனாட்சி சுந்தரம்

Category: வர்த்தகம்

Available - Shipped in 5-6 business days

Price:  500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மாருதியின் கதை(வணிகம்)

-642 003. 99761 44451.
மாருதி கார் நிறுவனத்தின் வெற்றிப் பயணம் குறித்த புத் தகத்தின் தமிழாக்கம் இது. ஒரு நாட்டின் பொருளாதா ரம் எப்படி கையாளப்பட் டிருக்கக் கூடாது என்பதின் அடையாளம் 1960-80 கால கட்டமாகும்.
உலகத் தரமான பொருள்களை உற்பத்தி செய்து, சிறந்த சேவையை வழங்கி, லாபகரமா கவும் இயங்குகிற பொதுத் துறை நிறுவனம் என்ற கருத்தே 1980-களில் இந்தியாவில் நகைப்புக்குரிய தாக இருந்தது. தரம் குறித்த விழிப்புணர்வு இல்லாத சூழலில் ஜப்பான் தொழில் ஒத்துழைப்புடன் உரு வானது மாருதி கார் நிறுவனம்.
'எல்லாம் வல்ல' அன்றைய பிரதமரின் மகன் சஞ்சய் காந்தியின் கனவுத் திட்டமாக மாருதி நிறு வனம் தொடங்கப்பட்டாலும், அது நிறைவேற பல தடைகளை எதிர்கொண்டது. திட்டம் நிறைவே றியே ப ஆக வேண்டும் என்று அரசு நிர்வாகம் முடுக்கி --விடப்பட்டது. அந்தக் கால பொருளாதார, அரசி ? யல், சமூக சிந்தனை, நிர்வாக சட்ட-திட்டங்கள் எவ் வளவு இறுக்கமானதாக இருந்தது என்பதை துல்லி யமாகப் படம் பிடிக்கிறது இந்நூல்.
'அன்று ஒருவாறு வெற்றிகரமாகவே இயங்கி வந்த வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பை ஊக்குவித்திருந்தாலே, விரைந்தும் ஊழல் பழிக்கு உள்ளாகாமலும் நாட்டுக்குப் புதிய ரக பயணிகள் வாகனம் கிடைத்திருக்கக் கூடும்.'
'அரசுக்கு சொந்தமான நிறுவனமாக இருந்த போதிலும் அரசு நிறுவனம் போல மாருதி நடத்தப் படக் கூடாது என்று ஒரு புதிய பணிக் கலாசாரம் உருவாக்கப்பட்டது; மாருதி என்னும் அரசு நிறுவ னம் தனித்துவமானதுடன், உயர் உற்பத்தித் திறன் கொண்ட பணிக் கலாசாரத்தை உருவாக்கியது' என் பது முதல், பல விஷயங்களை நேர்மையாகப் பதிவு செய்கிறார் மாருதி தலைவர் ஆர்.சி. பார்கவா.
ஒரு 'கார்ப்பரேட் த்ரில்லர்' வாசித்த அனுபவத் தைத் தருகிறது இந்நூல்!

மாருதியின் கதை(வணிகம்) - Product Reviews


No reviews available