காமராஜர் வாழ்வும் வரலாறும்
காமராஜர் வாழ்வும் வரலாறும்
அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்கு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவையாகும்.
ஏழை-எளியவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என எல்லோருக்கும் இலவசக்கல்வி, பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள், இலவச மதிய உணவு, சீருடைகள் இப்படிப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் காமராஜர், தனது மக்கள் தொண்டினால் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே காமராசர் புகழ் பெற்றுள்ளார். எதிரிகள் என்னதான் கேடு செய்தாலும் அவற்றை மன்னித்து மறந்துவிடும் மனிதநேயர். அதேநேரத்தில் நண்பர்கள் செய்யும் நன்மை சிறிதெனினும் அதை மறக்காத மாமனிதர். மக்கள் நலவாழ்வொன்றையே மனதில் கொள்ளுமாறு தனது சக அமைச்சர்கள் அனைவரிடமும் | காமராசர் அறிவுறுத்துவார். செயலற்றவர்களாயிருக்கும் மக்களைத் தட்டியெழுப்பி, தலைநிமிர்ந்து தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தொண்டருக்கும் வழிகாட்டுகிறது காமராசரின் வாழ்க்கை. தேசப்பற்று என்பது அருகிவிட்ட இக்காலத்தில், தனது சொந்த நலனைவிட நாட்டின் நலனே, மக்கள் நலனே எனது குறிக்கோள் என்று வாழ்ந்து மறைந்த காமராசரின் தியாக வாழ்வை சித்தரித்துக்காட்டுகிறது இந்நூல்.
காமராஜர் வாழ்வும் வரலாறும் - Product Reviews
No reviews available

