ஜோதிராவ் ஃபுலே (இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை)
ஜோதிராவ் ஃபுலே (இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை)
நவீன இந்தியாவின் முதல் பெரும் புரட்சியாளர், ஜோதிராவ் ஃபுலே. அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது தீண்டாமைக்கு எதிரான நீண்ட, நெடிய போரின் வரலாறும்கூட.
பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடம். ஆதரவற்ற, கர்ப்பிணிப் பெண்களுக்கான முதல் காப்பகம். உழைக்கும் மக்களுக்கான முதல் இரவுப் பள்ளி. இவை அனைத்தையும் தொடங்கி வைத்ததன்மூலம் கல்வி, சமூகம், அரசியல் ஆகிய துறைகளில் ஒரே நேரத்தில் மலைக்க வைக்கும் மாற்றங்களை ஃபுலே ஏற்படுத்தினார். இந்த மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் 19ஆம் நூற்றாண்டு இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
அறிவுதான் அவருடைய ஆயுதம். ஏன் சாதியமைப்பு சமத்துவத்துக்கு எதிரானது? ஏன் தீண்டாமை ஒரு கொடுங்குற்றம்? ஏன் சமத்துவம் தேவை? ஒவ்வொரு அடிப்படைக் கேள்வியையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து தன் வாதங்களைத் தெளிவாக முன்வைத்தார் ஃபுலே. அவருடைய கனவுகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் உயிர்கொடுத்தார் அண்ணல் அம்பேத்கர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் துயர வாழ்வையும், அவர்களுக்காக ஜோதிராவ் ஃபுலே முன்னெடுத்த மாபெரும் பணிகளையும் தக்க பின்னணியில் பொருத்தி விவரித்திருக்கிறார் நூலாசிரியர் தனுஸ் ஆதித்யன்.
இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை
ஜோதிராவ் ஃபுலே (இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை) - Product Reviews
No reviews available

