ஜாக்கி(ஓர் அன்பின் மொழியாடல்)
ஜாக்கி(ஓர் அன்பின் மொழியாடல்)
சங்க காலத்தில் ஞமலி என்றும் ஞாளி என்றும் நாய்கள் அழைக்கப்பட்டிருக்கின்றன. நாய் வளர்ப்பதென்பது மனம் சார்ந்த விஷயம். அது ஒரு குழந்தை வளர்ப்பதை விடவும் சிக்கலானது. சில மனிதர்களைப் போல, முன் அனுமானிக்க முடியாத காரியங்களைச் செய்யும் ஒரு உயிரினத்தை எப்படிக் கையாள்வது? எதற்கிந்த நீண்ட நாய் புராணம்?
விஷ்ணு என்ற இளம் எழுத்தாளர் எழுதிய "ஜாக்கி" என்ற முதல் புதினம்தான் இதற்கெல்லாம் காரணம். நாயோடு வாழ்ந்தவனை, அதைக் காதலியைப் போல் நேசித்தவனை இதில் நான் வாசித்தேன். அதன் பிரத்யேக குணவிசேஷங்களை அதன் பிரிவை, பிரசவத்தை நோயை, நோயுற்று அது பெறும் வலியை என்று அதன் மரணம் வரை கதையை எழுதிச் செல்கிறார் விஷ்ணு.
இதுபோன்ற இன்னும் வித்தியாசமான படைப்புகளின் வழி விஷ்ணு தன்னை இன்னும் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
-ரவிசுப்பிரமணியன்
ஜாக்கி(ஓர் அன்பின் மொழியாடல்) - Product Reviews
No reviews available

