தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி

தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
சபா நாவலன் அவர்கள் எழுதியது. பிரான்சில் பிரஞ்சு மொழி பேசியவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் அரைவாசிப் பகுதியிரேயாவர்.வேறுபட்ட பிரதேசங்களில் வேறுபட்ட மொழிகள் பேசப்பட்ட போதிலும் தேசத்தின் உருவாக்கத்தின் பின்னர் பிரஞ்சு மொழியெ தனியான பேச்சுமொழியாக மாற்றமெடுத்தது. முதன்முதலாக ஐரோப்பா தனது இராணுவ ,அரசியல்,பொருளாதார ஆதிக்கத்தை மற்றைய நாடுகள் மீது திணித்து இந்த நாட்டு மக்களை பிரித்தாள தொடங்கியபோதே எலகம் சீரழிக்கப்பட்டது. பெளத்த தத்துவம் பரவ தொடங்கியபோது அதன் புரட்சிகரமான தத்துவார்த்த பகுதிகளை கண்டு பயந்த ஆளும் வர்க்கத்தினரும்.அதன் தத்துவ கர்த்தாக்களாகவும் நெறியாளர்ளாகவும் திகழ்நத பிராமணர்களும் கெளதம புத்தரை ஒரு புராண கதாநாயகனாக உள்வாங்கி கொண்டு நவீன சமுக விஞ்ஞானத்திற்று ஈடான உபநிடதக்காலத்து பெளத்த தத்துவத்தைக் குழிதோண்டி புதைத்துவிடடனர்.