அறிந்த நிரந்தரம்
அறிந்த நிரந்தரம்
ரூபச் சொற்களின் அரூப மிச்சம்.
தமிழின் நவீனக் கவிதை வரலாற்றில் 1980களில் பொதுவாக நிலவியிருந்த யதார்த்தவாத உபாசனைகளை மறுத்தும், 'இருண்மைக் கவிதைகள்' எனும் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டுவிடும் பாதக நிலமையைப் பொருட்படுத்தாமலும் தனக்கென ஒரு பிரத்யேக மொழிவெளிப்பாட்டுடன் சொல்லல் முறையில் வித்யாச முத்திரையுடன் பிரம்மராஜன் வெளிக்கொணர்ந்த ஒரு சுதந்திரக் கவிதைப் பிரதி 'அறிந்த நிரந்தரம்'. இத்தொகுப்பின் கவிதைகள், நீரில் மூழ்கிய கடிகாரம் போல் சப்தம் அறுந்த காலங்களில் உருவான சொற்சங்கிலிகளைக் கொண்டு படிமங்களையும் இசையையும் ஒன்றிணைக்கும் ஒரு நனவிலி செயல்பாடு. இச்செயல்பாடு மூடிமழுப்பும் வியாக்கியானங்களை முற்றிலுமாக நிராகரிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது, லௌகீகத்தில் பார்த்தல், கேட்டல், காதல், பிரிவு மற்றும் இன்னபிற தனிமனித அனுபவங்களை இப்பிரபஞ்சத்தின் இயங்குவிசையுடன் ஒரே சமயத்தில் ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்கிற பிரயத்தனத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. மேலும், வெளிவந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் ஆகியும் தன்னைத் தவிர வேறு எதனையும் நம்பி நிற்காத பண்பு மாறாத் தன்மைக் கொண்ட இக்கவிதைகளின் வாசிப்பனுபவம் என்பது ஒரு கற்சிலா விக்கிரகத்தின் ரசவாத ஓவியம் அல்லது ஒருபாத அபிநயம் அல்லது ரூபச் சொற்களின் அரூப மிச்சம்.
- பிரதாப ருத்ரன்
அறிந்த நிரந்தரம் - Product Reviews
No reviews available

