வருணா
வருணா
ஒரு பறவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அதே மரத்தை மீண்டும் எப்படிக் கண்டுபிடிக்கிறது? ஒரு முதலை ஆண் துணையின்றி எப்படி கருவுறுகிறது? மூன்று உடுக்களின் இயக்கத்தை ஏன் அறிவியலால் இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை? ‘வருணா..!’ என்னும் சிறிய குறுங்கோள், சூரியக் குடும்பத்தின் வரலாற்றையே எப்படி மாற்றியது? பால்வெளிக்குள் கலந்துவிட்ட ‘சிவா’வும், ‘சக்தி’யும் யார்? இவ்வாறான வியப்பூட்டும் கேள்விகளுக்கான அறிவியல் விளக்கங்களை மட்டும் இப்புத்தகம் தருவதில்லை. இது அண்டத்தைப் புதிய கண்களால் பார்க்கச் செய்யும் ஒரு பயணம். அறிவியல் சிலருக்குப் பாடம். பலருக்கு வியப்பு. இந்தப் புத்தகம் அதை எல்லோருக்குமான அனுபவமாக மாற்றுகிறது. அண்டத்தின் மிகப் பெரிய மர்மங்களை, நம் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து, எளிய தமிழில், புதுமையான உவமைகளுடன், அறிவியல் துல்லியத்தை இழக்காமல் சொல்லும் இருபது சிந்தனையூட்டும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் ‘வருணா..!’ இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், உங்களுக்குள் ஒரு புதிய கதவைத் திறக்கும். அங்கே… அண்டத்தை மட்டும் அல்ல… உங்களையும் புதிதாகக் கண்டுபிடிப்பீர்கள். — ராஜ்சிவா
வருணா - Product Reviews
No reviews available

