வணக்கத்திற்குரிய வாஜ்பாய்
வணக்கத்திற்குரிய வாஜ்பாய்
ஜனனி ரமேஷ் ஓய்வு பெற்ற காப்பீட்டுத் துறை அதிகாரியான இவரின் பதினான்காம் வயதில் 'கல்கி' குழுமத்தைச் சேர்ந்த 'கோகுலம்' சிறுவர் இதழில் முதல் சிறுகதை வெளியானது. ஆங்கிலமும் தமிழும் அறிந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், சட்டம், இலக்கியம், வரலாறு, வர்த்தகம், அரசியல், இதழியல் என பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்றவர்.
அகில இந்திய வானொலியில் இவரது சிறுகதைகளும், கவிதைகளும், பிரபலங்களுடனான நேர்காணல்களும் ஒலிபரப்பாகி உள்ளன. 'இதயம் பேசுகிறது' மற்றும் 'ஆனந்த விகடன்' குழுமத்தின் 'ஜூ'னியர் போஸ்ட்', 'விகடன் பேப்பர்', 'நாணய விகடன்', கோகுலம் (கல்கி குழுமம்), வலம், ஆழம் ஆகிய பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.
'விகடன்.காம்' இணைய தளம் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகாலம் தினந்தோறும் வணிகச் செய்திகள் வழங்கியுள்ளார். தினமணி, தமிழ் இந்து (மாயாபஜார்), தினமலர் (தினமலர் பட்டம்), கலைமகள், அமுதசுரபி, விஜயபாரதம் மற்றும் தொழில், மருத்துவம், வணிகம், கட்டுமானம் உள்ளிட்ட துறை சார்ந்த பத்திரிக்கைகளில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மொழிபெயர்ப்புகள் உள்பட எழுதிய நூல்களின் எண்ணிக்கை 39 ஆகும். 'தமிழ் அறிஞர்கள் நூலுக்குத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. அமரர் தேவன் அறக்கட்டளை, விஜயபாரதம் பாரதி விருது. கவிதை உறவு, தேனி பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளன.
வணக்கத்திற்குரிய வாஜ்பாய் - Product Reviews
No reviews available

