ஸ்ரீஅரவிந்த அன்னை புனித சரிதம்

0 reviews  

Author: எஸ்.ஆர்.செந்தில்குமார்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஸ்ரீஅரவிந்த அன்னை புனித சரிதம்

வளம் கொழிக்கும் மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்கள்கூட மன நிம்மதி வேண்டும் என்றால் உடனே ஓடி வருவது இந்தியாவுக்குத்தான். மனித இனத்தின் வாழ்வை சொகுசாக்கும் அறிவியல் சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் மேற்கத்திய நாடுகளின் பலம் என்றால், மனித மனங்களை மேம்படுத்தும் வாழ்வியல் சிந்தனைகள் நமது சொத்து.
இறை சிந்தனையை மக்கள் மனதில் விதைத்து, தினசரி வாழ்வின் துயரங்களிலிருந்து அவர்களை மீட்கும் வழிகாட்டும் மாபெரும் மகான்கள் இந்த மண்ணில் அவதரித்து இருக்கிறார்கள்.

அவர்களில் அரவிந்தரும் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரராக விடுதலை வேட்கையை இந்தியாவில் விதைத்த அவர், அதன்பின் புதுச்சேரி வந்து ஆன்மிக சாதகத்தில் ஈடுபட்டார். பிரான்ஸ் நாட்டிலிருந்து அவரால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்த அன்னை, பல தமிழ்க் குடும்பங்களில் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறார்.
அவரது வழிபாடு எளிமையானது. மனதுக்கு இதம் தருவது; வாழ்வுக்கும் பல பலன்கள் தருகிறது. மலர்களால் அன்னையை வழிபட்டு வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டவர்கள் பலர். அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது இந்த நூலுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அன்னையின் வாழ்வும், அவரது தத்துவத் தேடல்களும், அவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களும் திரும்பத் திரும்ப படிக்கும் இன்பத்தை ஏற்படுத்துபவை. அந்த இன்பத்தில் நீங்களும் பங்கெடுங்கள்!

ஸ்ரீஅரவிந்த அன்னை புனித சரிதம் - Product Reviews


No reviews available