சிறியன சிந்தியாதான்
சிறியன சிந்தியாதான்
கம்பனது வாலி மகோன்னதமான பாத்திரம். அவன் வரம்பு இல்லாத ஆற்றலுக்கு உரியவன்; பஞ்ச பூதங்களையும் மிஞ்சிய வலியினன்; எட்டுத்திக்கு யானைகளின் எதிர்ப்பை முறியடித்த இராவணனையும் எளிதாகப் பிடித்து வாலில் கட்டி வலி அடக்கிய வீரன்: கூற்றுவனும் அவன் பெயரைக் கேட்டால் குலை நடுங்குவான். சாவா மருந்தாகிய அமுதத்தை அடைவதற்காக வானவரும் தானவரும் மந்தர மலையை மத்தாகக்கொண்டு, வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாக கொண்டு, பாற்கடலைக் கடைந்து களைத்துக் கலங்கியபொழுது, தனியனாக நின்று அக்கடலைக் கடைந்து அமுதத்தைத் திரட்டியவன் வாலி, அவன் கூட்டொரு வரையும் வேண்டாக் கொற்றவன் மட்டுமல்ல; ஒப்பாரும்,, மிக்காரும் இல்லாத கொடை வள்ளல்; பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தனக்கென்று கொஞ்சமும் கொள்ளாமல், தேவர்களுக்கு வழங்கிய இசைச் செல்வன். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்து சான்றாண்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய மாவீரன் என் பதைக் கருத்தில்கொண்டே கம்பன் வாலியைச் 'சிறியன சிந்தியாதான் என்று கணிக்கிறான்.
சிறியன சிந்தியாதான் - Product Reviews
No reviews available

