சிப்பியின் வயிற்றில் முத்து
Author: போதிசத்வ மைத்ரேய ; வங்கத்திலிருந்து தமிழில் :சு.கிருஷ்ணமூர்த்தி
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
சிப்பியின் வயிற்றில் முத்து
இந்த வங்க மொழி நாவல், தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் வாழும் மீனவ சமூகத்தையும், காவிரி தவழும் தஞ்சை-திருச்சி பகுதியின் தேவதாசிகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அவர்களின் இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள் போன்றவற்றை யெல்லாம் விவரிக்கும் இந்நாவலின் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை நடைபெறுகின்றன. கதையின் ஊடாக இந்திய விடுதலைப்போரும், விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பும், விடுதலைக்குப் பிந்தைய நிகழ்வுகளும் ஊடும் பாவுமாக நெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைக் களமாகக் கொண்ட இந்நாவலின் ஆசிரியர் வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் இதன் சிறப்பு. இந்நாவல் முதலில் வங்க மொழியில் 'நவ கல்லோல்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
போதிசத்வ மைத்ரேய நவீன வங்க இலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றவர். அதிக கவனத்தைப் பெறாத சாமானிய மக்களைப் பற்றி எழுதுவதே இவருடைய சிறப்பாகும். 'உத்தர் சாகரேர் தீரே', 'ஷேயிபிரேம் ஆஸ்வாதன்' ஆகியவை இவருடைய மற்ற படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
சு. கிருஷ்ணமூர்த்தி வங்கத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து வங்கத்துக்கும் ஏராளமான படைப்புகளை மொழியாக்கம் செய்தவர். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட 'கறையான்', 'தன் வெளிப்பாடு', 'நீலகண்டப் பறவையைத் தேடி' 'திருமணமாகாதவள்', உள்ளிட்ட பல நாவல்களை தமிழாக்கம் செய்தவர். சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருது பெற்றவர்.
சிப்பியின் வயிற்றில் முத்து - Product Reviews
No reviews available

