செப்டம்பர்: அன்பின் காலம்
செப்டம்பர்: அன்பின் காலம்
செப்டம்பர் மாதம் என்பது ஒரு புது தொடக்கத்தின் நிமிடங்களை நினைவூட்டும் காலம். மழைத்துளிகள் மெதுவாக பூமியைத் தொடும்போது, மனங்களில் மென்மையான உணர்வுகள் முளைக்கின்றன. இந்த மாதம் அன்பை வெளிப்படுத்துவதற்கும், உணர்ச்சிகளைப் பகிர்வதற்கும் மிகச் சிறந்தது.
‘செப்டம்பர் அன்பின் காலம்’ அடடா என்ன ஒரு அருமையான தலைப்பு. கவிஞருக்கு இது முதல் தொகுப்பு. கவிஞரைப் பற்றி பார்ப்போம்…
சமூக வலைதளங்களில் பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படும் பெயர் “கவிஞர் அன்பினி”. என்னதான் எழுதி இருக்கிறார் என்றே ஆராய்கையில் அவருடைய கவிதையே கலங்கரை விளக்கமாய் தெளிவுபடுத்தியது. தொகுப்பு முழுவதும் அருமையான கவிதைகள். எந்த கவிதைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் எல்லோருமே சற்று குழம்பித்தான் போவார்கள்…
“இந்த வாழ்வு இன்னும் சலிக்காமல் இருக்க
ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்
யாரேனும் ஒருவரை நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பதும்
யாரேனும் ஒருவர் உங்களை நேசித்து கொண்டிருப்பதும்…”
அடடா என்ன ஒரு அருமையான கவிதை. அன்பிற்குள் அடங்கிடும் இப்பிரபஞ்சம் என்பதை அழகாக உணர்த்துகிறது.
– மெஹராஜ் பேகம்
செப்டம்பர்: அன்பின் காலம் - Product Reviews
No reviews available

