சாக்கிய முனி புத்தர்

சாக்கிய முனி புத்தர்
மனங்களின் செயல்பாடே உலக இயக்கம் என்பதைக் கண்டு உணர்த்திய புத்தரை, உலகின் முதல் புரட்சியாளராக மானுடம் ஏற்றுக் கொண்டுள்ளது. மூடத்தனங்களை நம்புபவர்களுக்கு எதிரியாகவும் பகுத்தறிவாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் புத்தர் திகழ்கிறார். 'சாக்கியர்களுக்கும கோலியர்களுக்கும் இடையே ரோகிணி நதிநீரைப் பங்கிடுவதில் ஏற்பட இருந்த போரை எதிர்த்ததால் சித்தார்த்தர் சங்கத்தால் நாடுகடத்தப்பட்டார். அதனாலே துறவியாகி புத்தர் என்ற பெயர் பெற்றர் என்ற செய்தி பலரும் அறியாதது. அது இந்நூலில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுளும் ஆன்மாவும் இல்லை. நல்வாழ்வுக்குக் காரணி நல்ல எண்ணங்களே என்று போதித்தவரை அன்பின் மிகுதியால் ஆதி பகவனாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதற்குக் காரணம், அவரின் தூய்மையான எண்ணங்களில் விளைந்த கொள்கைகளே. இந்நூலில் புத்தரின் வாழ்வும் போதனைகளும் தெளிவுற சொல்லப்பட்டுள்ளதோடு , பெளத்த புனிதத் தலங்கள், திருவிழாக்கள் , பெளத்த வணக்கம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளன.