பொது புத்தி(எழுச்சியூட்டும் விடுதலை அரசியல் நூல்)
Author: தாமஸ் பெயின்;தமிழில்: மருத்துவர் ஜீவானந்தம்
Category: அரசியல்
Available - Shipped in 5-6 business days
பொது புத்தி(எழுச்சியூட்டும் விடுதலை அரசியல் நூல்)
'பொது புத்தி’ - உலக வரலாற்றை மாற்றிய அபூர்வமான ஓர் அரசியல் நூல்.
‘அரசு, சிறப்பாகச் செயல்பட்டால்கூட அது ஒரு தேவையான தீமையே; மோசமான நிலையில் அது மாற்ற முடியாத சோதனை!’ இது தாமஸ் பெயினின் முழக்கம்.
அவருடைய உலகப் புகழ்பெற்ற ‘காமன் சென்ஸ்’ நூலின் தமிழாக்கமான இது, அமெரிக்க விடுதலைப் போராட்டத்தின் குரலாக மட்டுமல்ல; மனிதகுல விடுதலைச் சிந்தனையின் புதிய விழிப்புணர்வாகவும் ஒலிக்கிறது.
அரசியல் அதிகாரம் மக்களிடமிருந்துதான் வருகிறது; பிறப்பால் யாருக்கும் ஆட்சியுரிமை இல்லை. மன்னராட்சி, வாரிசு ஆட்சி, பேரரசு - இவை அனைத்தும் மனிதன் தானே உருவாக்கிய சங்கிலிகள்; மக்களாட்சி, சமத்துவம், தன்னாட்சி ஆகியவை வாழ்வின் இயற்கையான உரிமைகள். இந்த அடிப்படை உண்மைகளை மறக்கும் சமூகமே அடிமைத்தனத்தின் வழிச் செல்கிறது என்கிறார் பெயின்.
பெயினின் எழுத்தில் எளிமை, தெளிவு மட்டுமல்ல, தர்க்கத்தின் துல்லியமும் தீவிரமும் புதிய உயிரிகளாய் இயங்குகின்றன. சிக்கலான அரசியல் கோட்பாடுகளையும் அவர் வெகுமக்களுக்கு புரியும் மொழியில் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் வார்த்தைகளுக்கும் புரட்சியை எழுப்பும் ஆற்றல் இருப்பதை உணர வைக்கிறார்.
தமிழர் வரலாறு என்பது சங்க காலம் முதல் திராவிட எழுச்சி வரை நீதிக்கும் சமத்துவத்திற்குமான தொடர்ந்த போராட்டத்தின் கதை. அந்தக் குரலுடன் இணைந்து, ‘பொதுப் புத்தி’ மீண்டும் ஒரு தெளிவான அழைப்பை விடுக்கிறது: ‘மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது அதிகாரத்தின் உரிமையல்ல; அவர்களின் சம்மதமே!’
‘பொது புத்தி’யைப் படிப்பது ஒரு புத்தக அனுபவம் அல்ல; அது விடுதலை, சமத்துவம், பொறுப்புணர்வு அகியவற்றை நம் உள்ளத்தில் உயிர்ப்பிக்கும் மறக்க முடியாத சிந்தனையின் பயணம்.
பொது புத்தி(எழுச்சியூட்டும் விடுதலை அரசியல் நூல்) - Product Reviews
No reviews available

