பீக்கதைகள்
பீக்கதைகள்
பதினான்கு கதைகளுடன் 2004ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வந்த ‘பீக்கதைகள்’ நூலில் மேலும் இருகதைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுப் பதினாறு கதைகளுடன் இப்போது புதிய பதிப்பாக வெளியாகிறது. இதிலுள்ள கதைகள் ‘பெருமாள்முருகன் சிறுகதைகள்’ தொகுப்பில் உள்ளன எனினும் வாசகர் விரும்பித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததால் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் தனிநூலாக உருவாகியுள்ளது. உணவைப் போல நம் அன்றாட வாழ்வில் கழிப்பும் முக்கியமானது. ஆனால் உணவைப் பற்றிப் பலபடப் பேசும் நாம் கழிப்பைப் பற்றிப் பேசத் தயங்குகிறோம் அல்லது மறைமுகப் பேசுகிறோம். நுணுகிப் பார்த்தால் பேசுவதேயில்லை என்றே சொல்லிவிடலாம். பேசுவதற்கான வாய்ப்பை நவீன காலம் வழங்கியுள்ளது. அதைப் பற்றிக் கொண்டு பல்வேறு சிக்கல்களை, மனநிலைகளை இக்கதைகள் மூலமாகப் பெருமாள்முருகன் சித்திரிக்கிறார். யாவரும் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.
பீக்கதைகள் - Product Reviews
No reviews available

