நீர் தேடும் நெஞ்சங்கள்

0 reviews  

Author: ஆதலையூர் சூரியகுமார்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீர் தேடும் நெஞ்சங்கள்

'நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். இத்தகைய நீரைச் சேமித்து வைக்கும் குளங்களும் ஏரிகளும் இன்று மண்மேடாகிக் காணப்படுகின்றன. மழைக்குக் காரணமான காடுகள் அழிக்கப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டன. இந்தப் புவியையும். நீரையும் பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வது நம் கடமையாகும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்குத் தேவையான கழிவுநீர் மறுசுழற்சி என்பதை மையக்கருவாக்கி இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்று புவியியல் சார்ந்த மேற்கல்வி பயின்று வரும் ஆதித்யா தான் இக்கதையின் நாயகன். அவனது மாமா பெண் சுகந்தி தான் நாயகி. இவர்களது காதலுக்கு இடையூறாகக் கிராமத்தின் தண்ணீர் பிரச்சினை அமைந்துவிடுகிறது. வறண்டு கிடக்கும் கிராமத்தையும். கழிவுநீர் கலந்து மாசாகிக்கிடந்த அந்த ஊர் ஆனைக் காத்தான் வாய்க்காலையும் சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆதித்யா எண்ணுகிறான். அவனுக்குத் துணையாக அவனது நண்பன் இணைகிறான். இந்த இருவரும் தங்கள் காதல் துணையோடு சேர்ந்து வாய்க்காலைச் சரி செய்ய நினைக்கிறார்கள். ஊர்மக்கள் துணையையும் கேட்கிறார்கள்? ஊர்மக்கள் அவர்களுக்குத் துணையாக வந்தார்களா? இந்த நால்வரும் வாய்க்காலைச் சரி செய்தார்களா? ஊரின் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்ததா? என்பதை இந்தக் கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
 

நீர் தேடும் நெஞ்சங்கள் - Product Reviews


No reviews available