முருகனின் ஆறுபடை வீடுகள்
முருகனின் ஆறுபடை வீடுகள்
ஆறெழுத்து மந்திர நாதராகிய ஆறுமுகப் பெருமான், ஆதியந்தமில்லாத சிவன் அன்றி வேறல்லர்; அ முதற்கடவுளும் பரம்பொருளும் 3 அவரே. நாடிவருவோரின் அன்பைப் பெற்றுக் கொண்டு அருளையும் பொருளையும் வாரி வழங்கும் வள்ளல். தெய்வங்களுள் மேலான தெய்வம், கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், வழிக்கும் வாழ்விற்கும் துணைவன் என்றெல்லாம் போற்றப் பெறுபவர். உலகம் உவக்குமாறு குன்றுதோறும் கோயில் கொண்டு எழுந்தருளித் திகழ்ந்து, நாடிவரும் அன்பர்கட்கும், பாடிவரும் பக்தர்கட்கும், காவடி எடுத்து ஆடிவரும் அடியவர்க்கும் அருள்புரிந்து, வேண்டும் வரமளித்துக் கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்றார். கந்தப்பெருமானின் அருள் மணக்கும் தலங்களை, அருள் பெற்ற கவிமன்னராகிய நக்கீரர் ஆறுபடை வீடுகளாக வகுத்துக் காட்டுகின்றார். அவை: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பவையாகும். முருகக் கடவுளை, “திருப்பரங்குன்றத்து அரசே!” “சீரலைவாய் முத்தே!" "பழனி மலைக்கான மணி விளக்கே!" "ஏரகத்தின் தின் பெரு வாழ்வே!" "குன்றுதோறாடல் பெருமாளே!". "பழமுதிர் சோலைப் பரனே!" என்று சிந்தை குளிர போற்றி மகிழ்கின்றார்கள். அன்பர்கள் போற்றி உவக்கும் ஆறுபடை வீடுகளின் பெருமைகளை இந்நூலின் வழி காணலாம். வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. கந்தனுண்டு கவலை இல்லை.
முருகனின் ஆறுபடை வீடுகள் - Product Reviews
No reviews available

