மீண்டும் என் தொட்டிலுக்கு
ஒப்பனை தேசத்தில் ஒப்பனையின்றி வாழத் துடிக்கும் கற்பனைக் கலைஞனின் கதை. வட்ட முகத்தோடு வாய் வார்த்தைகளுக்கும் சேர்த்தே அரிதாரம் பூசிக் கொள்ளும் போலிகளின் மத்தியில், அரிதாரத்தையே விரும்பாத உதவி இயக்குநர் ஒருவன் என்ன ஆகிறான் என்று உணர்வுபூர்வமாக உரைக்கும் நாவல்.
மகரந்தன் - கவிபேரரசின் எழுத்தில் அந்தக் கதாநாயகனை நாம் உணரும்போது - அவனது தன்னம்பிக்கை நமக்குத் தொற்றிக் கொள்கிறது. அவனது கண்ணீர் நம் இமைகளில் பிசுபிசுக்கிறது. அவனுக்காகச் சிரிக்கிறோம். வாசிக்கும் கணங்களில் அவனாகவே வாழ்கிறோம்.
நிஜமாய் ஒரு நாவல்: நாவலாய் ஒரு நிஜம்.