மழை நின்ற மறுநாள்
மழை நின்ற மறுநாள்
ஒலிக்கும் தொனியையும் உபயோகிக்கும் இடத்தையும் பொறுத்தே வார்த்தைகளின் பொருள் வெளிப்படும். சந்துருவுக்கு வார்த்தைகளை மிக நுட்பமாகக் கையாளத் தெரிகிறது. நான்கைந்து வரிகளுக்குள்ளாகவே அவர் பேசவருகிற அரசியலையோ, சித்தரிக்கிற காட்சியையோ கண் முன் நிறுத்தி விடுகிறார். கவிதைகளில் அவர் பூடகமாக இடைச்செருகுகிற பொருண்மைகள் நம் சிந்தனைக்குள் பெரும் காட்சியாக விரிகின்றன.!
வெ.நீலகண்டன்
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் வாழ்வில் இருந்து வந்தவை. வாழ்க்கையை அவ்வளவு கவனமாக உள்வாங்குகிறாய், அதன் கணங்களிலிருந்து கவிதையை எடுத்துக் கொள்கிறாய், வாழ்க்கையை கவிதையாக்குவதால் அந்த கவிதைக்கு அர்த்தமும், அழகும் கூடி விடுகிறது.
அகம் சார்ந்த கவிதைகள் மட்டுமல்ல புறம் சார்ந்த கவிதைகளும் இத்தொகுப்பில் நிறைந்திருக்கின்றன. வெப்பம் கொப்பளிக்க அறத்தைப் பாடுகின்றன, அவை.
தோழமையுடன்
வி.உ.இளவேனில்
மழை நின்ற மறுநாள் - Product Reviews
No reviews available

