மயக்கம் என்ன

மயக்கம் என்ன
இன்றைய தமிழர் வாழ்வில் பற்றிப் படர்ந்திருக்கும் பெருநோயாகப் பெருகி யிருப்பது மதுவுக்கு அடிமையாகிவிட்ட மனோபாவம். எம் தமழினம் இந்த மோசமான நோயிலிருந்து மீண்டெழவேவ முடியாதோ என்ற அச்சம் ஆரோக்கியமான சமுதாயத்தை அவாவும் அனைவர் மனங்களையும் அலைக்கழிக்கிறமு. உடலைக் கெடுத்து,உணர்வுகளை மழுங்கச் செய்து, உயிரைக் குடிக்கும் மதுவரக்கனின் ஆக்டோபஸ் விரல்களின் கோரப் பிடியில் விழுந்து ழூச்சுத் திணறும் மக்களைக் காப்பாற்றினாலன்றி நம் தமிழினம் பொன் விடியலைக் காண்பதற்கு வாய்பை இல்லை.
கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியதும், மதுவிலக்கிற்காக மகாத்மா கொடி பிடித்ததும் அர்த்தமற்றுப் போய்விட்டன. போதை தரும் பாதையில் சமுதாயத்தின் பயணம் அரசாங்க அங்கீகாரத்துடன் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. விளக்கின் வெளிச்சம் விட்டில் பூச்சிகளை வீழ்த்துவதுபோல், மதுவின் மயக்கம் மனிதரை வீழ்த்துகிறது.
மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடிப்பவர் குடும்பங்களின் சீரழிவை, உடல் உறுப்புகளில் உருவாகும் நோய்களை, மது மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை அறிவுலக நியாங்களுடன் இவ்வளவு அழகாகவும், அழுத்தமாகவும், விரிவாகவும், விளக்குகிறது இந்த நூல்.