குவளைக்கண்ணன் கவிதைகள்(முழுத்தொகுப்பு)
Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
குவளைக்கண்ணன் கவிதைகள்(முழுத்தொகுப்பு)
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்டு விதமான எளிமை உண்டு. ஒன்று குழந்தை மனத்தின் எளிமை. பிறகு அறிவு சேர்ந்து, எளிமை இழந்து தவித்து, அவஸ்தை கொண்டு அலைக்கழிந்து, பின் மனம் கடந்து மலரும் புதிய எளிமை. இரண்டும் ஒன்றல்ல. குழந்தையின் எளிமை தன்னிருப்பு அறியாதது. மனம் கடந்த எளிமை தன்னிருப்பின் ஊற்றுக்கண்ணில் தற்கணம் நிலைப்பது. இந்த இரண்டாவது எளிமையின் பார்வை அங்கங்கே வெளிச்சம் காட்டுவது குவளைக்கண்ணன் கவிதைகளின் சிறப்பு.
-ஆனந்த்
குவளைக்கண்ணன் கவிதைகள்(முழுத்தொகுப்பு) - Product Reviews
No reviews available

