குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு

0 reviews  

Author: ஹரீஷ் பிரபாகரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு


ஒவ்வொரு ஊரிலும் ஒரு காவல் தெய்வம் அல்லது எல்லை தெய்வம் என்பது இருக்கும். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தின் உறையூர்ப் பகுதியில், விருப்பாச்சிபுரம் கிராமத்து எல்லையில் அமைந்துள்ளது காவல் தெய்வமான குழுந்தலாயி அம்மன் திருக்கோயில், இந்த அம்மனது திருக்கோயில் அமைப்பு, இந்த அம்மனைப் பற்றிய புராண வரலாறு முதலான பல செய்திகள் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஓலைப்பிடாரி தேர் மற்றும் குட்டி குடித்தல் திருவிழா ஒன்றாகும். கிராம எல்லைத் தெய்வமானது பனை ஓலையால் செய்யப்பட்ட ஓலைப் பிடாரியாகத் திருவிழாக் காலங்களில் தேரில் வலம் வரும். இதுவே ஓலை பிடாரி என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பெண் எல்லைத் தெய்வங்களுக்குக் காவலாக ஒரு ஆண் காவல் தெய்வம் இருக்கும். இந்த காவல் தெய்வமே கருப்பண்ணசாமி. திருவிழாவிற்கான காப்புகட்டும்போது அருள் ஏறப்பெற்ற நபரே மருளாளி ஆவர். இந்த மருளாளி திருவிழாவின்போது, ஆட்டுக்குட்டியின் ரத்தத்தைக் குடிக்கும் நிகழ்வே குட்டி குடித்தல் ஆகும்.
இத்திருவிழாவைப் பற்றி இந்நூல் விரிவாகக் கூறுவதோடு, குழுந்தலாயி அம்மனின் எல்லைகள், மருளாளி என்பவர் யார் என்பது பற்றிய செய்திகள், பிற முக்கியமான திருவிழாக்கள், தாரை என்னும் இசைக்கருவி பற்றிய செய்தி, மருளாளி அணியும் இரு கிளிகள் உருவம் கொண்ட பிரம்மாண்டமான இரட்டைக்கிளி மாலை பற்றிய செய்தி, அம்மனுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடுகள், கருப்பண்ணசாமி, கல்வெட்டு, ரத்தம் குடிக்கும் கிண்ணம் ஆகியவற்றைப் பற்றியும் விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.
 

குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு - Product Reviews


No reviews available