கலை அரங்கமும் திரை அரங்கமும் சில பதிவுகள்
கலை அரங்கமும் திரை அரங்கமும் சில பதிவுகள்
1972
இல் ஒரு நாள் மாலைப்பொழுதில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்த அல்காஷியின் நெறியாளுகையில் மேடையேறிய 'அயனெஸ்கோ'வின் பாடம் (The Lesson) என்னும் நாடகத்தினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதேபோல் ஜோல்டன் ஃபாப்ரியின் Ant's Nest என்னும் படத்தினை உலகத் திரைப்பட விழாவில் பார்க்க நேரிட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளின் பாதிப்பே என்னைத் திரைப்படம், அரங்கம் இவற்றின் மீதான ஈடுபாட்டிற்கு உந்தித் தள்ளியது.
மதுரைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவனாக இருந்தபோது சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிக்கையின் அறிமுகம், வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் முதலானோர்களின் எழுத்துக்களோடு எனக்குள்ள தொடர்பு இவற்றின் பின்னணியோடு தில்லி வந்த எனக்குத் தலைநகரத் தமிழனின் வாழ்வியல் நோக்கு, கலை இலக்கிய ஈடுபாடெல்லாம் வெகுஜனப் பண்பாட்டுத் தளத்திலே தஞ்சம் புகுந்திருப்பதைக் கண்டு ஓர் அதிர்ச்சி...
கலை அரங்கமும் திரை அரங்கமும் சில பதிவுகள் - Product Reviews
No reviews available

