ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்
ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்
"தன்னந்தனியாக இருந்த தீவில் ,பயங்கர ஜந்துக்கள் வாழும் புதர்களுக்கு நடுவே எப்படி தைரியமாக இருக்கிறீர்கள்?" "என்ன பயம்?யாரைக் கண்டு பயம் ..எல்லாம் வியாசராயர் பார்ததுக் கொள்வார்.அவர் இருக்கும் வேறு துணை எதற்கு?""எதற்காக இந்த சேவை?..."ஒரே மாதிரியான பதிலைக் கேட்டு சற்றுத் துணுக்குற்றேன்.இவருக்கு சித்தப் பிரமையாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது."இங்கே வரவேண்டும் என்று எப்படித் தோன்றியது ? எதாவது காரணம் இருக்குமே"-பேச்சை வளர்த்தேன்."கொஞ்ச காலம் முன் மந்த்ராலாயம் சென்றேன்.அங்கு தொடையில் பெரிய கட்டிகள் வந்து மிகவும் சிரமப்பட்டேன்.ராகவேந்தர சுவாமிகள் சொப்பனத்தில் வந்து நவபிருந்தாவனத்துக்கும் போ " என்று சொன்னார். இங்கே வந்த பிருந்தாவனங்களை எல்லாம் சேவா செய்தேன்.இரண்டே நாட்களில் எல்லா கட்டிகளும் உடைந்து , காய்ந்து ,உதிர்ந்து போயின.அதிலிருந்து நம்பிக்கை வளர்த்தது ஊருக்கு போனேன். பொருள் நஷ்டம் ஏற்பட்டு மன நிம்மதி இழந்தேன்.வாழ்க்கையை கசந்தது.என்னமோ தோன்றியது.மறுபடியும் இங்கே வந்து ,இரண்டு வேளை ஸ்நானம் செய்து விட்டு ,மகான்களை வலம் வந்து கொண்டிருக்கிறேன்.நான் வந்து இருபது நாட்கள் ஆகின்றன.மனம் நிம்மதியாக இருக்கிறது"என்று அந்த இளைஞர் எங்களுக்கு சந்தனப்பிரசாதம் கொடுத்தார்.பக்தியோடு பெற்றுக் கொண்டோம்.
ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Product Reviews
No reviews available