தலையணை மந்திரம்
தலையணை மந்திரம்
தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் - அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம்.அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக்கொள்ளலாம். தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதெ அதை எப்படி நேராக்கிக் கொள்வது.தாம்பத்யத்துக்கான சோதனைக் கள்னான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது. தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லையா? அது இல்லாமல் வாழ்க்கையில்லை, அதே சமயம் அது ஒன்றே வாழ்க்கையில்லையே! அதுவுமு் வாழ்க்கையில் ஒரு அங்கம் நிச்சயத் தேவை என்ற அணுகுமுறை இந்தப் புத்தகத்தில் கையாளப்படுகிறது.
தலையணை மந்திரம் - Product Reviews
No reviews available