அறிவின் தேடல்
அறிவின் தேடல்
கடவுளை, காண முடியாது: ஆனால் உணரமுடியும் என்கிறீர்களா! காற்றைப் போல, வெப்பத்தைப் போல, குளிரைப் போல! அப்படியும் உணர முடியவில்லையே! மின்காந்த அலைகள் போல எனில், எந்த விஞ்ஞான கருவியாலும் கண்டறிய முடியவில்லையே! கடவுள் இருப்பதை ஐம்புலன்களால் உணர முடியாமல் போனாலும், பகுத்தறிவினாலும் அறிந்து கொள்ள முடியவில்லையே! கடவுளைக் காண முடியாது, உணர முடியாது, கருத்துக்காகவாவது புலப்பட வேண்டாமா?
சரி கடவுள் உருவமற்றவரா? 'ஆம்!" என்றால் பிறகு எதைக் கடவுள் என்பது?இந்த வெளியையா? இந்தப் பிரபஞ்சத்தையா? சர்வ வல்லமை படைத்த கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்கின்றனர் ஞானிகள. அப்படியானால், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறாரா? இந்தப் பிரபஞ்சத்தையே கடவுள்என்பதா? பிரபஞ்சத்தைக் கடவுள் என்பதா? பிரபஞ்சத்தைக் கடவுள் ன்று சொல்ல முடியுமா? இந்தப் பிரபஞ்சம் சிந்தித்து செயல் படக் கூடிய ஒன்றா? இது வெறும் ஜட பொருள்தானே! அதற்கு உயிர், உள்ளம், சிந்தனைப் போன்றவை இருக்கிறதா? பிறகு எப்படி அது உலக உயிர்களின் வாழ்வை ஏற்றத்தாழ்வு உடையதாக மாற்றி அமைக்கும் ?
அறிவின் தேடல் - Product Reviews
No reviews available