விக்டர் பிராங்கல் அவர்கள் எழுதியது. தமிழில்: ச.சரவணன்.
உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்கும் இருத்தலைப் பீடித்திருக்கும் வெறுமையிலிருந்து மீள்வதற்குமான நம்பிக்கையைப் பற்றிக் கொள்ள மனிதமனம் கொண்டிருக்கும் வேட்கையை இது தெளிவாக உணர்த்துகிறது. மனிதகுல மீட்சிக்காக மனிதனின் மீது நம்பிக்கை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆத்மார்த்த முயற்சி இந்தப் புத்தகம். இது ஒரு வரலாற்றுப் ஆவணம். ஓர் இறுதி எச்சரிக்கை. பெறுமதியான சிந்தனையும் நம்பிக்கையும் நோக்கமும் இழைந்தோடும் வெகுமதியான புத்தகம். |